கேப்பாப்பிலவு படைமுகாம் அருகில் மீண்டும் தேக்கக்காட்டில் தீ பரவியுள்ளது!

கேப்பாப்பிலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும்
தீ பரவியுள்ளது.
கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அருகில் உள்ள படை முகாம்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்தத் தீ பரவலால் 25 ஏக்கர் வரையான தேக்கமரக்காடுகள் எரிந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.