லண்டன் பயணித்தார் மைத்திரி.!


2018 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று லண்டனுக்குப் பயணித்துள்ளார். நாளை முதல் 20 ஆம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காகவே அரச தலைவர் லண்டனுக்குப் பயணித்துள்ளார். இதன் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளது அரச தலைவர்கள் பலருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 92ஆம் பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.