வவுனியா பகுதியில் வாள்வெட்டு!

வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த கோபி (வயது – 22) என்பவரே நேற்று (சனிக்கிழமை) படுகாயமடைந்தார்.

குறித்த இளைஞனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையே இச்சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.