கோட்டாபயவிற்கான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு!
பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எனினும் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்த தடையுத்தரவு இடையூறாக அமையாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை