இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் பலி!

இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி 6 ஆம் பிரிவு  விடுதி வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய  ஏ.சி. முகமட் றியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாளங்குடா இராணுவ முகாமின் பின்பகுதியில் அமைந்துள்ள களப்பு பகுதியில் சம்பவதினம் மாலை 5 மணிக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டபோதே களப்பின் சேற்றில் புதைந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.