எவன்காட் இராணுவ கேணல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

எவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கேணல்  தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 அவரை கடந்த 9 ஆம் திகதி காலி பிரதான நீதவான், நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய வேளை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

 எல்பிரட் விஜயதுங்க என்ற குறித்த முன்னாள் இராணுவ கேணல் , சீதுவ - லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.