போதை மாத்திரைகளை முச்சக்கர வண்டியில் கடத்திச்சென்ற மாணவன் கைது!

வலி நிவாரண மாத்திரை என்ற போர்வையில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு தொகை போதை மாத்திரைகளை ஏறாவூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 இந்த போதை மாத்திரைகள் முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளது இதன்போது முச்சக்கர வண்டியில் சென்ற மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகத்திற்குரிய சாரதியும் மற்றுமொருவரும் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  முச்சக்கரவண்டியில் இருந்து எண்ணூறு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 இந்த மாத்திரை ஒன்று 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.