மன்னாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலான நோ்முக தோ்வுகள் நேற்றையதினம் (17-04-2018) செவ்வாய்க்கிழமை முதல் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த நோ்முக தோ்வுகள் மூன்று பிரிவுகளாக இடம் பெற்று வருகின்றது.மன்னார் மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் காணப்படுகின்ற போதும், அவர்களில் சுமார் 515 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.


இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(17) தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மூன்று கட்டங்களாக இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில், பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும், விடுபட்ட குறித்த பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25 ஆம் திகதி புதன் கிழமை மாலை வரை நேர்முகத்தேர்வுகள் இடம் பெறும் என மன்னார் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.