யாழ் கொக்குவிலில் நடன ஆசிரியை மீது வாள்வெட்டு!

யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றும் நடன ஆசிரியைக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.