இந்­தியா சென்று வந்­த­பின்­னர் பல விட­யங்­கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளது!

அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­களை அரசு எடுக்­கத் தவ­றி­னால் அரச நிர்­வாக முடக்­கப் போராட்­டம் நடக்­கும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கூறி­யிருப்­பது மக்­க­ளுக்கு “கப்சா” விடும் செயலே. கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இழந்த வாக்கு வங்­கியை நிரப்­பும் உத்­தியே தவிர வேறு ஒன்­று­மில்லை.
இவ்­வாறு கூறி­யுள்­ளார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன். அர­சி­யல் தீர்­வுக்­கான காத்­தி­ர­மான முயற்­சி­களை அரசு எடுக்­கா­து­விட்­டால் வடக்கு, கிழக்கு எங்­கும் அரச நிர்­வாக முடக்­கப் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். அது தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­த­போதே சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

கூட்டு அரசு அமைக்­கும்­போது எந்­த­வி­த­மான ஒப்­பந்­தங்­க­ளை­யும் செய்­து­கொள்­ளாது – நிபந்­தனை இன்றி ஆத­ரவு வழங்­கி­விட்டு, ஆட்­சிக்­கா­லம் 3 ஆண்­டு­கள் கடந்­துள்ள நிலை­யில் நிர்­வாக முடக்­கப் போராட்­டம் நடத்­து­வோம் என்று கூறு­வது தமிழ் மக்­க­ளுக்கு “கப்சா” விடும் செயலே. அதில் எந்­தப் பய­னும் இல்லை.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லின்­போது நாம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். தென்­னி­லங்கை தரப்­பு­கள் நிறை­வேற்ற வேண்­டிய விட­யங்­க­ளைக் குறிப்­பிட்டு அவர்­க­ளு­ட­னான எழுத்­து­மூ­ல­மான ஒப்­பந்­தம் செய்­து­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னேன். அதை சம்­பந்­தன் ஏற்­றுக் கொண்­டார்.

ஆனால் இந்­தியா சென்று வந்­த­பின்­னர் நிபந்­தனை இன்றி ஆத­ரவு வழங்­கப்­ப­டும் என்று திடீ­ரென அறி­வித்­தார். இனப்­பி­ரச்­சினை மட்­டு­மல்­லாது பல விட­யங்­கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டி­யுள்­ளது. காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் பிரச்­சினை என்­ப­வற்­றுக்­கான தீர்­வு­கள் கிடைக்க வேண்­டி­யுள்­ளது. வெளிக்­காட்­சி­க­ளுக்­காக சில நூறு ஏக்­கர் நிலங்­களே விடு­விக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்­கும் எமது மக்­க­ளின் அய­ராத போராட்­டமே கார­ணம்.

நாம் சில உத்­தி­க­ளைக் கையாண்­டி­ருக்­க­லாம். பிரச்­சி­னை­கள் வரும்­போது மட்­டுமே அர­சு­டன் பேசு­கின்­ற­னர். அதை­விட்டு அர­சும், தமிழ்க் கூட்­ட­மைப்­பும் முத­லில் பேச்சு நடத்­த­வேண்­டும். அரசு எவற்­றைச் செய்ய வேண்­டும் என்­பதை எடுத்­துக் கூற வுண்­டும். அர­சின் நிலைப்­பாட்டை வைத்து தீர்வு விட­யத்­தில் அரசு என்ன நிலைப்­பாட்­டில் உள்­ளது என்­பதை அறிந்து செயற்­பட்டு இருக்க வேண்­டும்.

அதை விடுத்து இப்­போது போராட்­டம் வெடிக்­கும் என்று கூக்­கு­ரல் இடு­வது இழந்த வாக்­கு­களை மீளப் பெறு­வ­தற்­கான முயற்­சியே தவிர, தீர்வு விட­யத்­தில் எந்­தப் பய­னை­யும் தராது.- என்­றார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.