இறப்பர் தொழிற்சாலை அனர்த்தம் - இழப்பீட்டை நிராகரித்த குடும்பத்தினர்!

ஹெரணை  பெல்லப்பிட்டிய கைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை உரிமையாளர் வழங்கிய இழப்பீட்டை அவர்கள் நிராகரித்துள்ளனர்.

 பாணந்துறை மருத்துவமனைக்கு வந்த தொழிற்சாலை உரிமையாளர், தமக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தார் என உயிரிழந்த ஒருவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 எனினும், தாம் உள்ளிட்ட ஏனைவர்களும் குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, குறித்த கைத்தொழிற்சாலையில் நிர்வாக அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

 சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிக்குமாறு, அதன் நிர்வாக அதிகாரியிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கியதாகவும், எனினும், அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தொழில் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தறங்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.