வவுனியா நீதிமன்ற வழக்குத் திகதியில் மாற்றம்!

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்த வழக்குகள் அனைத்தும் முதலாம் திகதி இடம்பெறும் என வவுனியா நீதிவான் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

மே மாதம் முதலாம் திகதி விடுமுறைநாள் இல்லை எனவும் மே 7 ஆம் திகதியே விடுமுறை நாளாக கொள்ளப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் மே மாதம் 7 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மே முதலாம் திகதி நடத்தப்படும் என வவுனியா நீதிவான நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.