கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டவர் கைது!

கஞ்சா செடி பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் புத்தள, வந்தம தெமலிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 50,000 கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

லுனுகம்வெஹர, குடாகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.