யாழில் 13 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

13 வயதான மாணவி ஒருவர் யாழ். மாதகல் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மாணவி மரம் ஒன்றில் தூக்கிட்டு கொண்டுள்ள தகவல் அறிந்த இளவாலை பொலிஸார்; சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.