ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொங்றீட் பணிகளுக்கு, 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்துக்கு 55 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டு மேற்படி பாலம், ஆயிரம் பாலம் திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஜக்கிய இராஜ்ஜியத்தின் நிதியுதவியுடன், 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது நிறைவுற்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மழையால் புதுமுறிப்புக் குளத்தில் நிரம்பிய நீர் காரணமாக பாலத்தின் புனரமைப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டது எனவும் இல்லை எனில் கடந்த வருடமே காலத்தின் பணிகள் நிறைவு பெற்றிருக்கும் எனவும் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனனர்.

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.