பணய கைதிகளாக மூன்று இலங்கையர்கள்!

கிரேக்கத்தில் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் அந்த நாட்டு காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

 பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின் தெசலொனிகி நகரில் 50 பேர் கொண்ட ஏதிலிகள் குழுவொன்று பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

 குறித்த ஏதிலிகளின் குடும்பத்தாரை மிரட்டி கப்பம் பெறும் நோக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது .

 இதுகுறித்த தகவலையறிந்த காவற்துறையினர் அவர்களை மீட்டுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவுக்கொள்கை அமைச்சர் டிமிட்ரிஸ் விஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

 இந்த குழுவில் மூன்று இலங்கையர்களும் உள்ளடங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.