காலி, களுத்துறை மாவட்டங்களில் வெள்ளம்!

நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக காலி, களுத்துறை
மழைநீர் வடிந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர் நதிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
காலி மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் கடும் மழை பெய்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி உதவி பணிப்பாளர் லெப்டினன் கேணல் தம்பத் ரத்நாயக்க தெரிவித்தார்.
 2
இன்று காலை ஆறு மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் காலி ஜின்தொட்ட பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. 175 மில்லிமீற்றராக பதிவாகி உள்ளது.
காலப்பகுதியில் காலி நகரத்தில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. கோனபீனுவல என்ற பகுதியில் 125 மில்லமீற்றர் மழை வீழ்;ச்சியும் ஹக்மீமன பகுதியில் 98 மில்லிமீற்றர் மழைவீழ்;ச்சியும் பதிவாகி உள்ளது. நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக பேருவளை, பாணத்துறை ஆகிய பிரதேச பகுதிகளில் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஓடைகள் மற்றும் வடிகான் கட்டமைப்பில் நீர் வழிந்தோடுவது தடைப்பட்டமை இதற்கு காரணம் என்றும் மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் கேணல் பிரசாத் ஜயசிங்க தெரிவித்தார்.

மாவட்டங்களின் தாழ்;ந்த பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.