வவுனியாவில் செயலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் அதிகமான பெண்கள் இன்று (30.05) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.


அரசியல்வாதி ஒருவர் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பிரதேசத்திலுள்ள உலுக்குளம், நெலுக்குளம், மகாகச்சக்கொடி பிரதேசங்களிலுள்ள ஐந்து தையல் பயிற்சி நிலையங்களில் கடந்த ஆறு மாத காலங்கள் தையல் பயிற்சி பெற்று வந்த பெண்களே அரசியல்வாதி ஒருவர் பயிற்சியின் இறுதியில் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர்.

இச் செயற்பாடு குறித்து வவுனியா அரசாங்க அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்க அதிபர் இப்பிரச்சனையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.