பிரான்சில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவுசுமந்த துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்.!

பிரான்சில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் நினைவுசுமந்த
துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையினால் கடந்த (27-05-2018) ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் கிரித்தே பொம்பிடோர் (Créteil- Pompadour) பகுதியில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மாவீரர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் திருவுருவப்படத்துக்கு 2001 ஆம் ஆண்டு முகமாலை தீச்சுவாலை நேரடிமோதலில் வீரச்சாவடைந்த லெப் கேணல் அறிவாணன் அவர்களின் சகேதரர் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார் தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து அனைத்துப் போட்டிகளும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் அணிகளுக்குமான வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது

முதலாம் இடத்தை: யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம் .
இரண்டாம் இடத்தை: ஸ்கந்தா விளையாட்டுக்கழகம்
மூன்றாம் இடத்தை: எழிச்சி விளையாட்டுக்கழகமும் தட்டிச்சென்றன.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் போட்டிகள் யாவும் நிறைவுபெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.