மட்டக்களப்பில் நடமாடும் சேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலை
காரணமாக ஆவணங்களை இழந்தவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.

குறித்த நடமாடும் சேவை இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலத்திற்குட்ட வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பதிவாளர் திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், ஆட்பதிவு,பொலிஸ் திணைக்களம், மின்சார திணைக்களம், நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை உட்பட 26 திணைக்களங்கள் இங்கு சேவையினை வழங்கியது.இதில் 800 இற்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றுள்ளனர். இந்த நிகழ்வின் போது 5 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டு பதிவு சான்றிதழும், முதியவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கிளையும் அமைக்கப்பட்டு மக்களுக்கு அதன் சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும், இந்த நிகழ்வில் பிரதிஅமைச்சர் அலி சாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ரஜனி, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.