வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்!

வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மீள்குடியேற்றத்தில் இன்னும் பல செய்ய வேண்டியுள்ளது,குறிப்பாக இராணுவத்தினர் இன்னும் முக்கியமான வளமான பகுதிளைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அதில் புதிய கட்டடங்கள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கட்டங்களை இடிக்காமல் அதை அவ்வாறே நிர்வகிப்பமை தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், ப.கஜதீபன் வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.