முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் நாடாளுமன்றில் களேபரம்!
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’’ நிகழ்வு தொடர்பிலும், இறுதிப்போர் குறித்து அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகவும், மகிந்த அணியான பொது எதிரணி நாடாளுமன்றத்தில் இன்று கேள்விக் கணைகளைத் தொடுக்கவுள்ளது.
மே மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகின்றது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று உட்பட தினப் பணிகள் முடிவடைந்த பின்னர், பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவால் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
“தமிழினப் படுகொலை நாள்’ என்ற தொனிப்பொருளின் கீழேயே வடக்கு மாகாண சபையால் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என்ற தகவலையா சர்வதேச சமூகத்துக்கு அரசு வழங்கப் பார்க்கின்றது? என்றும், நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் அவர் கேள்விகளை எழுப்பவுள்ளார்.
மே மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகின்றது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று உட்பட தினப் பணிகள் முடிவடைந்த பின்னர், பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவால் கேள்விகள் எழுப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
“தமிழினப் படுகொலை நாள்’ என்ற தொனிப்பொருளின் கீழேயே வடக்கு மாகாண சபையால் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. அதைத் தடுப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மூலம் இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என்ற தகவலையா சர்வதேச சமூகத்துக்கு அரசு வழங்கப் பார்க்கின்றது? என்றும், நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் அவர் கேள்விகளை எழுப்பவுள்ளார்.
கருத்துகள் இல்லை