ஆசிரியர்களின்மையால் மாணவர்கள் பாதிப்பு!
சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களில் கடந்தாண்டு நடைபெற்ற தமிழ்மொழி மூல க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய பாடங்களிலும் அதி திறமை சித்தி பெற்றிருந்தனர்.
இருப்பினும் குறித்த மாவட்டங்களில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் உயர்தர வகுப்பிற்குரிய ஆசிரியர்களின்மையால் கலை மற்றும் வர்த்தக பிரிவில் கல்வியை தொடரக்கூடிய நிலை தோன்றி இருப்பதாக மாணவர்களும் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் மிக அருகிலுள்ள மத்திய மாகாணத்தில் அதற்கான வாய்ப்பும் வசதிகளும் இருந்தும் ஒரு சிலர் மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு கல்வியை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் மேலும் சில வசதி படைத்த பெற்றோர் மாத்திரம் தங்கள் பிள்ளைகளை வடக்கு–கிழக்கு மற்றும் கொழும்பு நகரங்களுக்கும் அனுப்பி உயர் கல்வியினை தொடர முயற்சித்து வருகின்றனர்.
இதனால் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலக் கனவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் முன்வந்து தீர்வொன்றை பெற்றுத்தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை