கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை!

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாகத்  பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார். 
குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்குபடுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.