மண்டைதீவு சந்தியில் அமைந் துள்ள புனித பேதுருவானவரின் சிலை உடைப்பு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு சந்தியில் அமைந் துள்ள புனித பேதுருவானவரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சிலையை உடைத்தவர் என்று கூறப்படுபவர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. சிலையை கூண்டில் இருந்து எடுத்து கீழே போட்டு உடைப்பதை அவதானித்த ஊர் மக்கள் அவரைக் பிடித்து மண்டை தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பும் சிலை அமைத்துள்ள வெளிப்புற கண்ணாடி தொகுதி உடைக்கப்பட்டது. பின்னர் சீரமைத்து கொடுக்கப்பட்டது.
மதங்களுக்கு இடையே நல்லிணக்ககத்தை குழப்பும் வகையில் செயற்படுவோர் மீது உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டு கொண்டுள்ளனர் .
மதங்களுக்கு இடையே நல்லிணக்ககத்தை குழப்பும் வகையில் செயற்படுவோர் மீது உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டு கொண்டுள்ளனர் .
கருத்துகள் இல்லை