தியத்தலாவை இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு!

தியத்தலாவையிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமில், இன்று (17) காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சியொன்றின் போதே, இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால், இராணுவ வீராங்கனையொருவரும்  வீரர்கள் இருவரும்  காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில், இராணுவப் பொலிஸார் மற்றும் தியத்தலாவை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






             

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.