பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விக்கியைச் சந்திக்க மறுப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருடனும், அமைச்சர்களுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கலந்துரையாடாது என்று அந்தச் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணமேனன் தெரிவித்தார்.
நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர், உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று சந்திப்பு நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்தது. அதில் தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள் என அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு தரவேண்டும் என்று மாணவர் ஒன்றியம் கோரியிருந்தது.
எனினும் கடந்த 3 ஆண்டுகளாக நினைவேந்தலை மாகாண சபையே நடத்துகிறது. இந்த வருடமும் வடக்கு மாகாணசபை நடத்தும். அதற்குத் தேவையான உதவிகளை மாணவர் ஒன்றியம் வழங்கலாம் என்று மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மாணவர் ஒன்றியத்துக்கும், வடக்கு மாகாணசபைக்குமிடையில் நிகழ்வை நடத்துவது தொடர்பான சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது. அதையடுதது வடக்கு மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கும் யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஏற்பாட்டை வடக்கு மாகாண முதல்வர் முன்னெடுத்திருந்தார்.
அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நேற்று இரவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நேற்று இரவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை இந்த நிகழ்வை அரசியலாக்க முனைகிறது. அதில் எமக்கு உடன்பாடில்லை அதனாலேயே இந்தக் கலந்துரையாடல் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. எனினும் மக்கள், சிவில் சமூகத்தினர், பொது அமைப்புகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை