சிறுவர்களின் மரணத்திற்கான காரணம் பல வைரஸ்களின் கூட்டு!

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றினால்
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மரணத்திற்கு காரணம் பல வைரஸ்களின் கூட்டு செயற்பாடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜயம்பதி சேனாநாயக்க இதனை  தெரிவித்தார்.

 இது தொடர்பில் மருத்துவ துறையினர் தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்த வைரஸ் காரணமாக தென் மாகாணத்தில் 12 வயதிற்கும் குறைந்த 11 சிறுவர்கள் இதுவரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.