ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி!

​வெலிகந்த, போஅத்த பகுதியில்
நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

போஅத்த எப்.சீ ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கண்டி, மெதவெல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலம் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.