காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல் 02 !

பிரச்சனைகளுக்கான காரணிகளின் மூலவேர்களையும் அவற்றைச் சாத்தியப்படுத்தும் சமூக அமைப்புமுறைகளையும் நாம் அறிந்துகொள்வதும்
கேள்விக்கு உள்ளாக்குவதும் அவசியமானதாகும். அந்த நோக்குடன், உரையாடலின் அடுத்த கட்டமாக சென்ற ஆண்டு வெளியான தயா சோமசுந்தரம் - நா. நவராஜ் அவர்களின் "வழிதவறிப்போன ஓர் இளைஞர் தலைமுறை" என்ற உரையை மையப்படுத்திய நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளோம்.
தயா சோமசுந்தரம் - நா. நவராஜ் எழுதிய மேற்குறித்த நூலானது A Lost Generation of Tamil Youth என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட உரையினைத் தழுவித் தமிழில் எழுதப்பட்டதாகும். அதிகரித்துவரும் சமூகச் சீரழிவுகள், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் வன்முறைகள் ஆகியவற்றின் அடிப்படைக்காரணிகளை அறிந்துகொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த நூல் இதுவாகும். இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இந்நூலினையும் வாசித்துவிடுவது நிகழ்வினை ஆக்கபூர்வமாகக் வழிநடத்த உதவும். நாம் தொடர்ந்து பயணிக்கவும் உரையாடவும் செயற்படவுமான தேவையினை மீளமீள வலியுறுத்தவேண்டி இருக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.