பிரான்சிலி ருந்து வந்தவர்,யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்!
யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாரின் வீட்டுக்கு பிரான்சிலி ருந்து வந்தவர், நேற்றுத் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த ஜோசெப் அருள்தாஸ் (வயது-–38) என்பவரே உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்தவர், தனது தாயாரின் வீட்டில் தங்கியுள்ளார்.
அவர் தாய் வீட்டில் நேற்றுத் தேநீர் குடித்து விட்டு இருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த ஜோசெப் அருள்தாஸ் (வயது-–38) என்பவரே உயிரிழந்துள்ளார். இலங்கைக்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்தவர், தனது தாயாரின் வீட்டில் தங்கியுள்ளார்.
அவர் தாய் வீட்டில் நேற்றுத் தேநீர் குடித்து விட்டு இருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.
கருத்துகள் இல்லை