தமிழக ஏதிலிகள் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!

தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் ஏதிலிகள் நாடு திரும்ப விருப்பம் கொண்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள புலம்பெயர்தவர்களின் நல செயற்பாட்டாளர் நடேசலிங்கம் இதனை தெரிவித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிலரால் பரப்பப்பட்ட குறித்த தகவலில் எந்த விதமான உண்மையும் இல்லை எனவும், ஏதிலிகள் தொடர்பில் தமிழக அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் வெளியிடும் தகவலே உண்மையானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.