யாழில் இறுதி சடங்கில் ஐவர்ருக்கு கத்தி குத்து!


இறுதி சடங்கில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கத்தி வெட்டில் முடிந்ததில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். வரணி வடக்கில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் போது ,மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த இரு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இறுதியில் வாய் தர்க்கம் கத்தி வெட்டில் முடிந்தது.

குறித்த சம்பவத்தில் , வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 45), சவுந்தராஜ் ராஜ்மிலன் (வயது 29), கந்தசாமி சுரேஸ்குமார் (வயது 31), அறிவழகன் கஜன் (வயது 27), கணபதி நவரட்ணம் (வயது 52) ஆகியோரே கத்தி வெட்டில் படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.