பாலியல் வழக்குகள் பதிவு: அமைச்சர் ரிஜிஜு!
இந்தியாவில் 2014 முதல் 2016 வரை ஒரு லட்சத்துப் பத்தாயிரத்து 333 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 457 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 வழக்குகளும், 2016ஆம் ஆண்டில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை