பிறந்து சிசுவை நடுவீதியில் விட்டுச் சென்ற தாய்!

தம்புள்ளை - பொஹொரன்வெவ பிரதேசத்தில் பிரதான வீதியில் விட்டுச்செல்லப்பட்ட நிலையில் பிறந்து சில நாட்களே ஆன சிசுவொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீதியில் பயணித்த வாகன சாரதியினால் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்று காலை இந்த பெண் சிசு மீட்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

குழந்தை தற்போது நலமாக உள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.