வவுனியாவில் பெண்னொருவர் செய்த பசுக் கொலை!
வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்பட்ட நான்கு பசுக்கள் விசம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் வவுனியா செட்டிகுளம் அருகே நடந்துள்ளது.
இந்தக் கொலைகளைப் புரிந்தார் என்று அயல் கிராமத்திலுள்ள பெண் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட தட்டாங்குளம் பகுதியில் இருவரால் வளர்க்கப்பட்ட பசுமாடுகள் நான்கு ஒரே நேரத்தில் நேற்று திடீரென இறந்து கிடந்தன.
குழப்பமடைந்த உரிமையாளர்கள் செட்டிகுளம் பொலிஸார், மற்றும் கால்நடை மருத்துவருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த கால்நடை மருத்துவர் இறந்த பசுமாடுகளை சோதனையிட்டார். மாடுகள் அனைத்தும் விசம் அருந்தியே இறந்துள்ளன என்று உறுதிப்படுத்தினார்.
குழப்பமடைந்த ஊர் மக்கள் அயலில் உள்ள சிங்களக் கிராமம் ஒன்றிலுள்ள பெண்ணே மாடுகளின் சாவுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டினர்.
தனது தோட்டத்தினுள் மாடுகள் நுழைவதாக முன்னமே அந்தப் பெண் முரண்பட்டிருந்தார் என்று காரணம் கூறினர். அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸாருடனும் ஊர் மக்கள் முரண்பட்டனர். நிலமையைச் சீரசெய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
ஒருவருக்கு சொந்தமான மூன்று பசுமாடுகளும் இன்னுமொருவருடைய ஒரு பசுமாடுமாக நான்குமாடுகள் இறந்துள்ளன. மேலும் இரண்டு மாடுகள் விசம் உட்கொண்ட நிலையில் காப்பாற்றப்பட்டன. இறந்த பசுக்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டது
இந்தக் கொலைகளைப் புரிந்தார் என்று அயல் கிராமத்திலுள்ள பெண் மீது பொதுமக்கள் குற்றஞ்சாட்டியதை அடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட தட்டாங்குளம் பகுதியில் இருவரால் வளர்க்கப்பட்ட பசுமாடுகள் நான்கு ஒரே நேரத்தில் நேற்று திடீரென இறந்து கிடந்தன.
குழப்பமடைந்த உரிமையாளர்கள் செட்டிகுளம் பொலிஸார், மற்றும் கால்நடை மருத்துவருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த கால்நடை மருத்துவர் இறந்த பசுமாடுகளை சோதனையிட்டார். மாடுகள் அனைத்தும் விசம் அருந்தியே இறந்துள்ளன என்று உறுதிப்படுத்தினார்.
குழப்பமடைந்த ஊர் மக்கள் அயலில் உள்ள சிங்களக் கிராமம் ஒன்றிலுள்ள பெண்ணே மாடுகளின் சாவுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டினர்.
தனது தோட்டத்தினுள் மாடுகள் நுழைவதாக முன்னமே அந்தப் பெண் முரண்பட்டிருந்தார் என்று காரணம் கூறினர். அவரை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸாருடனும் ஊர் மக்கள் முரண்பட்டனர். நிலமையைச் சீரசெய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
ஒருவருக்கு சொந்தமான மூன்று பசுமாடுகளும் இன்னுமொருவருடைய ஒரு பசுமாடுமாக நான்குமாடுகள் இறந்துள்ளன. மேலும் இரண்டு மாடுகள் விசம் உட்கொண்ட நிலையில் காப்பாற்றப்பட்டன. இறந்த பசுக்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை