வடக்கு கிழக்கு400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின்​ 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து  தெரிவித்தார்.  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் அரச மற்றும் பொதுமக்களின், 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.