மட்டக்களப்பு – கல்முனை கோர விபத்து!

மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீற் கற்குவியல் மீது மோதி நின்றது.

இச்சம்பவத்தில் காரை செலுத்திச் சென்றவரும் கூலித் தொழிலாளியான தாளங்குடாவைச் சேர்ந்த 56 வயதான எஸ். ஆறுமுகம் என்பவரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.