பௌத்த சமயமே நல்லிணக்கத்துக்கு தலைமைத்துவம் வழங்குகிறது!
பௌத்தம் பலவந்தமாக எவரையும் மதத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தும் சமயம் அல்ல எனவும், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு பௌத்த சமயமே தலைமைத்துவம் வழங்குகிறதாகவும் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் அனுமதியில்லாமல் தையிட்டில் விகாரைக்கு நேற்று முன்தினம் அடிக்கல் நடப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
30 ஆண்டு கால போரில் கடுமையாக சேதமடைந்த யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையை அமைப்பதற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் றெஜினோலட் குரே நாட்டி வைத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
30 ஆண்டு கால போரில் கடுமையாக சேதமடைந்த யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையை அமைப்பதற்கான அடிக்கல்லை நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் றெஜினோலட் குரே நாட்டி வைத்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
பௌத்த சமயத்தைத் தவிர உலகில் வேறு எந்த வழிப்பாட்டு தலங்களிலும் தெய்வங்களின் படங்கள் அல்லது வேறு மத தலைவர்களில் படங்கள் வைக்கப்படுவதில்லை என்பதுடன் வழிப்பட வாய்ப்பில்லை.
எனினும் பௌத்த சமயத்துக்கு அப்படியான வரையறைகள் கிடையாது. பௌத்தம் பலவந்தமாக எவரையும் மதத்தில் இணைந்துக் கொள்ளுமாறு வற்புறுத்தாது. இதனடிப்படையில் நோக்கினால், சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு பௌத்த சமயமே தலைமைத்துவம் வழங்குகிறது என்பது தெளிவானது.
விகாரை என்பது வேறு மதங்களையும், வேறு இனங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் இடமாக இருக்கக் கூடாது எனவும் ஆளுநர் றெஜினோல்ட் குரே குறிப் பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை