பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம்!

தென்கொரியாவில் ஆட்களை இணைத்து கொள்ளும் பணியை இலங்கை வெளிநாட்டு பணியகம் மேற்கொண்டு வருகிறது.

இதனால் கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து மோசடிகளை மேற்கொள்வோரிடம் பணத்தை வழங்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.

கொரிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதாக தெரிவித்து பணத்தை சேகரிக்கும் மோசடி காரர்கள் தொடர்பில் தொலை தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாடோ, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சட்டத்தை கடுமையாக நடைமுறை படுத்துமாறு பணியகத்துக்கு இவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தென் கொரியாவில் தொழில்வாய்ப்புக்காக இணைத்து கொள்ளும் செயற்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கொரிய மனிதவள திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விடையத்தில் அரச ரீதியிலோ ஏனைய வெளி நபர்களினாலோ எந்த அழுத்தத்தையும் மேற்கொள்ள முடியாது.

கொரியாவில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கொரிய மொழியை பயிற்சிப்பதற்காக எந்த ஒரு நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ பெயரிடவில்லை எனவும், எவருக்கும் எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.