திட்டமிட்டவாறு நாளை போராட்டம் !

திட்டமிட்டவாறு நாளை(வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நியாயமான தீர்வினை பெற்றுத் தராமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், சயிட்டம் நெருக்கடியை போன்றே சிங்கப்பூர் உடன்படிக்கையையும் கொண்டு செல்வதுதான் அரசாங்கத்தின் தேவையா எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.