கால்வாயில் மீட்கப்பட்ட – குழந்தைக்கு ஆசைப்படும் நடிகை!

சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

இந்த சிசுவை சின்னத்திரை நடிகை கீதா என்பவர் தான் உயிருடன் மீட்டுள்ளார் . குழந்தையை காப்பாற்றி வெந்நீரில் குளிப்பாட்டி பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

தற்போது நடிகை கீதா தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகியும் 7 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த குழந்தையை தானும் தன்னுடைய மகளும் வளர்க்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளார் .

மேலும் தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்றால் நல்ல முறையில் குழந்தையை வளர்ப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.