சுமங்கலிப் பெண்கள் ஆலயங்களை நோக்கி படையெடுப்பு!

கணவன் ஆரோக்கியத்தோடும், நீண்ட நாள் உயிர் வாழும் பாக்கியம் கிடைப்பதற்கு பெண்களால் செய்யப்படும் விரதமாக சுமங்கலி விரதம் காணப்படுகின்றது.

அந்த வகையில் இன்று நாடளாவிய ரீதியில் சுமங்கலி விரதம் ஆலயங்களிலும், வீடுகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இலங்கையின் பல பாகங்களிலும் பெண்கள் நோன்பிருந்து ஆலயங்களுக்கு சென்று லக்சுமியை நினைத்து பூஜை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

கொழும்பு


கொழும்பு - முகத்துவாரம் மஹாவிஷ்ணு ஆலயம் மற்றும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலும் சுமங்கலி பூஜை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மலையகம்

வரலட்ச்சுமி விரதத்தை முன்னிட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய விஷேடபூஜை வழிப்பாடு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.