கூட்டுப் பயிற்சியில்- இலங்கைக் கடற்படையினர்!!

ஆஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கூட்டு கடற்படைப் பயிற்சி ஒன்றில் இலங்கைக் கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர்.
ஆஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்துக்கு அப்பால் ககாடு (KAKADU) என்ற பெயரிலான 14 ஆவது கூட்டு கடற்பயிற்சி நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 15 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. இதில், 26 நாடுகளைச் சேர்ந்த 24 போர்க்கப்பல்கள், 21 விமானங்கள், 2000 படையினர் பங்கேற்கவுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.