நாவற்குழி விவகாரம்: சுமூகத் தீர்வை எட்டுவதற்காக வழக்கு ஒத்திவைப்பு!
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழிக் காணிக்குள் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டில் 35 குடும்பங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், நீண்டகாலம் வழங்கி வழக்குத் திகதியிடப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழிக் காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளதா கத் தெரிவிக்கப்பட்டு 62 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 35 வழக்குகள் விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
குடியிருப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மக்களை காணிகளிலிருந்து வெளியேற்ற முற்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில், வீடமைப்பு அதிகார சபைக்குரிய அமைச்சர் சஜித் பிரேமதாசவி டம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அரச காணிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது அரசின் கொள்கையல்ல என்று பதில் கூறிய அவர், நாவற்குழி விவகாரம் தொடர்பில் எதுவும் தெரியாது என்றார். வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுடன் மாலையில் பேச்சு நடத்தப்பட்டது. அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அந்தக் காணியிலிருந்து ஏன் உங்களை வெளியேற்றக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுவதற்கு திகதியிடுமாறு அவர் மன்றில் கோரியுள்ளார்.
காரணம் காட்ட முடியும் என்று கூறிய சட்டத்தரணி சுமந்திரன், வழக்கை நீண்ட நாள் திகதியிடுமாறு மன்றில் கோரினார். வீடமைப்பு அதிகார சபையின் சட்டத்தரணி நீண்ட நாள் திகதி வழங்கக் கூடாது என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த விடயங்கள் இன்று (நேற்று) பத்திரிகைகளில் வந்துள்ளமையை நீதிமன்றின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்ததுடன், அமைச்சர் குறிப்பிட்டதை கவனத்தில் எடுத்து வழக்கை நீண்ட நாள் திகதியிடுமாறு கோரினார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை நவம்பர் 9ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்குகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது குடும்பத் தலைவருக்குப் பதிலாக பெண்கள் நீதிமன்றில் முற்பட்டனர். அடுத்த தவணைக்கு வழக்கில் பெயர் குறிப்பிட்ட குடும்பத் தலைவர் சமூகமளிக்க வேண்டுமெனவும் பதில் நீதிவான் உத்தரவிட்டு சமூகமளித்தவர்களை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் செல்லுமாறும் உத்தரவிட்டார். எஞ்சிய வழக்குகள் எதிர்வரும் 24ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
குடியிருப்பாளர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், நீண்டகாலம் வழங்கி வழக்குத் திகதியிடப்பட்டது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழிக் காணியில் அத்துமீறிக் குடியேறியுள்ளதா கத் தெரிவிக்கப்பட்டு 62 குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 35 வழக்குகள் விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
குடியிருப்பாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மக்களை காணிகளிலிருந்து வெளியேற்ற முற்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்தில், வீடமைப்பு அதிகார சபைக்குரிய அமைச்சர் சஜித் பிரேமதாசவி டம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அரச காணிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது அரசின் கொள்கையல்ல என்று பதில் கூறிய அவர், நாவற்குழி விவகாரம் தொடர்பில் எதுவும் தெரியாது என்றார். வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுடன் மாலையில் பேச்சு நடத்தப்பட்டது. அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகத் தெரிவிக்கப்பட்டது என்று மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அந்தக் காணியிலிருந்து ஏன் உங்களை வெளியேற்றக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுவதற்கு திகதியிடுமாறு அவர் மன்றில் கோரியுள்ளார்.
காரணம் காட்ட முடியும் என்று கூறிய சட்டத்தரணி சுமந்திரன், வழக்கை நீண்ட நாள் திகதியிடுமாறு மன்றில் கோரினார். வீடமைப்பு அதிகார சபையின் சட்டத்தரணி நீண்ட நாள் திகதி வழங்கக் கூடாது என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் நடந்த விடயங்கள் இன்று (நேற்று) பத்திரிகைகளில் வந்துள்ளமையை நீதிமன்றின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்ததுடன், அமைச்சர் குறிப்பிட்டதை கவனத்தில் எடுத்து வழக்கை நீண்ட நாள் திகதியிடுமாறு கோரினார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை நவம்பர் 9ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
வழக்குகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது குடும்பத் தலைவருக்குப் பதிலாக பெண்கள் நீதிமன்றில் முற்பட்டனர். அடுத்த தவணைக்கு வழக்கில் பெயர் குறிப்பிட்ட குடும்பத் தலைவர் சமூகமளிக்க வேண்டுமெனவும் பதில் நீதிவான் உத்தரவிட்டு சமூகமளித்தவர்களை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் செல்லுமாறும் உத்தரவிட்டார். எஞ்சிய வழக்குகள் எதிர்வரும் 24ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
கருத்துகள் இல்லை