மன்னார் அகழ்வுப் பணி 20 வரை இடை நிறுத்தம்
மன்னார் சதொச வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அகழ்வுப் பணிகள் இதுவரை சனி, ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாள்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு வாரமளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த லங்கா சதோச கட்டடம் உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அந்தக் காணியில் அகழப்படும் மண் விற்பனை செய்யப்படுகின்றது. அங்கு கொள்வனவு செய்யப்பட்டு மன்னார், எமில் நகரில் வீடொன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன என்று வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் அங்கு சென்று மண்ணை ஆராய்ந்ததுடன், மன்னார் நீதிமன்றின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தனர்.
மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாள்ககள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மண் குவியலில் இருந்தும், வீட்டு வளாகத்துக்குள் பரப்பப்பட்ட மண்ணிலிருந்தும் சந்தேகத்துக்கிடமான எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன. அதையடுத்து லங்கா சதோச கட்டட கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த அகழ்வுப் பணிகள் இதுவரை சனி, ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாள்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு வாரமளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த லங்கா சதோச கட்டடம் உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அந்தக் காணியில் அகழப்படும் மண் விற்பனை செய்யப்படுகின்றது. அங்கு கொள்வனவு செய்யப்பட்டு மன்னார், எமில் நகரில் வீடொன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன என்று வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் அங்கு சென்று மண்ணை ஆராய்ந்ததுடன், மன்னார் நீதிமன்றின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தனர்.
மார்ச் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 3 நாள்ககள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மண் குவியலில் இருந்தும், வீட்டு வளாகத்துக்குள் பரப்பப்பட்ட மண்ணிலிருந்தும் சந்தேகத்துக்கிடமான எலும்புத் துண்டுகள் மீட்கப்பட்டன. அதையடுத்து லங்கா சதோச கட்டட கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கருத்துகள் இல்லை