நாயாற்றில் எட்டு தமிழ் வாடிகள் தீக்கிரை!

மாலை ஆறு மணியளவில் ஔிபாய்ச்சி மீன்பிடிப்பதற்கென கடலுக்கு சென்ற தென்னிலங்கை மீனவர்களின் படகுகளை நாயாற்றின் தமிழ் மீனவர்கள் முன்னின்று தடுத்து திரும்பி அழைத்ததை தொடர்ந்து இரவு பதினொன்று மணியளவில் தமிழர்களில் எட்டு வாடிகள் எரித்து நாசம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு படகு, மூன்று எஞ்சின், பெறுமதியான வலைகள் உள்ளடங்கலாக தமிழர்களின் எட்டு வாடிகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தற்கு காவல் துறையினரும் தீயணைப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர். எரிந்துகொண்டிருக்கும் பகுதிகளை அணைக்கும் பணி நடைபெற்றவண்ணம் உள்ளது.




#srilanka  #tamilnews  #fishermen  #Bern  #Nayaru

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.