வடக்கு மாகாண சபை உறுப்பினர் அமைச்சர் ஹக்கீமுக்கு கடிதம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்புடன் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள குடிதண்ணீர் வழங்கலுக்கான நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் மேலதிக நீரை நெற்செய்கைக்குப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு
மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியாமாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப. சத்தியலிங்கம் மத்திய நீர்வழங்கல் அமைச்சர் ஹக்கீமுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாயி களின் 165 ஏக்கர்வயல்நிலம் அரசால் சுவீகரிக்க ப்பட்டது. இதற்குமாற்றீடாக அதேபகுதியில் காணப்பட்ட கைவிடப்பட்ட குளங்கள் 2 சீரமைக்கப்பட்டு அதன் கீழாக வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
எனினும் வயல் நிலங்கள் கையளிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாகக் குளங்க ளுக்கு போதிய நீர்வர வில்லை. ஏற்கனவே விவசாய அமைப்புகளுடன் செய்துகொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் சீரமைக்கப்பட்ட குளங்களுக்கான நீர்வரத்து தொடர்பில் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்படுமென உறுதியளிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மேலதிகநீரானது , ஆற்றில்பாய்ந்து கடலில்கலக்கின்றது. எனவே அணைக்கட்டிலிருந்து சுலுசு மற்றும்கால்வாய் அமைப்பதனூடாகச் சீரமைக்கப்பட்ட குளங்களின் நீர்வரத்தினை அதிகரிக்கமுடியும். இதனால் விவசாயிகள் பிரச்சினை களின்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்.
இதுதொடர்பில் வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் என்னால் கொண்டு வரப்பட்ட பிரேரணை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ,நீர்வழங்கல் வடிகாலமைப்பு ச்சபை அனுமதிக்குமிடத்து வேலையை செய்வதற்குத் தயாராக இருப்பதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.எ
எனவே விவசாயி களின் நன்மை கருதி மேற்படி திட்டத்தை நடை முறைப்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனஅந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியாமாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப. சத்தியலிங்கம் மத்திய நீர்வழங்கல் அமைச்சர் ஹக்கீமுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாயி களின் 165 ஏக்கர்வயல்நிலம் அரசால் சுவீகரிக்க ப்பட்டது. இதற்குமாற்றீடாக அதேபகுதியில் காணப்பட்ட கைவிடப்பட்ட குளங்கள் 2 சீரமைக்கப்பட்டு அதன் கீழாக வயல் நிலங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
எனினும் வயல் நிலங்கள் கையளிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாகக் குளங்க ளுக்கு போதிய நீர்வர வில்லை. ஏற்கனவே விவசாய அமைப்புகளுடன் செய்துகொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் சீரமைக்கப்பட்ட குளங்களுக்கான நீர்வரத்து தொடர்பில் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்படுமென உறுதியளிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் மேலதிகநீரானது , ஆற்றில்பாய்ந்து கடலில்கலக்கின்றது. எனவே அணைக்கட்டிலிருந்து சுலுசு மற்றும்கால்வாய் அமைப்பதனூடாகச் சீரமைக்கப்பட்ட குளங்களின் நீர்வரத்தினை அதிகரிக்கமுடியும். இதனால் விவசாயிகள் பிரச்சினை களின்றி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும்.
இதுதொடர்பில் வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் என்னால் கொண்டு வரப்பட்ட பிரேரணை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ,நீர்வழங்கல் வடிகாலமைப்பு ச்சபை அனுமதிக்குமிடத்து வேலையை செய்வதற்குத் தயாராக இருப்பதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.எ
எனவே விவசாயி களின் நன்மை கருதி மேற்படி திட்டத்தை நடை முறைப்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனஅந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை