நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின்23 ஆவது ஆண்டு நினைவு தினம்!

நாகர் கோவில் பாடசாலையில் சிங்கள வான் வல்லூறுகளின் தாக்குதலின் பலியான மாணவசெல்வங்க்களை நெஞ்சம் மறக்குமா…?

யாழ்.வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் ” புக்காரா ” குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட புறாக்களின் அவலச்சாவை நெஞ்சம் தான் மறக்குமா…?
தலைவாரி, பொட்டுவைத்து, பள்ளி சென்று வா என்று அம்மா அனுப்பிவைக்க, பத்திரமாக படித்துவிட்டு வீடு திரும்பி வா என அப்பாவும் சொல்லி அனுப்ப, வெள்ளை நிற பள்ளிக்கூட ஆடைகளை அணிந்து உல்லாசமாக, உற்சாகமாகச் பாடசாலை சென்ற அந்த மாணவச் செல்வங்கள் மீது குண்டுபோட சிங்கள இனவெறியனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ தெரியவில்லை.
பாவம்! பள்ளிக்குச் செல்லும் பிள்ளை அன்று வீடு திரும்ப மாட்டாள் என அம்மாவுக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது. பாடசாலை சென்ற பையன் இனி வீட்டிற்கு பிணமாகத் தான் வருவான் என அப்பா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
|| நாகர் கோவில் மாணவர் மீதான வான் தாக்குதல்…


http://www.youtube.com/my_videos?o=U

இலங்கை புக்காரா ரக விமானங்கள் பாடசாலை என்று கூடப்பாராமல் குண்டுகளை சரமாரியாக வீசிச் சென்றது. அதில் 21 பாடசாலை மாணவர்கள் ஸ்தலத்திலேயே உடல்சிதறி துடிதுடித்து பலியானார்கள்.
உலகே உலகே ஒரு தரம் ….
பாடசாலையில் எஞ்சியிருந்த மாணவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக பாடசாலையை விட்டு சிதறி நாலா பக்கமும் ஓடியதைக் கண்ணுற்ற சிங்கள இனவெறியன் கிராமத்தின் எல்லாஇடங்களிலும் கண்டபடி குண்டு மழைகளை சரமாரியாக பொழிந்து தள்ளினான். அதன் காரணமாக வீதியில் விடுகளில் இருந்த பொதுமக்களும் பலியாகினார்கள் எங்கும் புழுதியுடன் கரு மேகம் சூழ்ந்தவண்ணம் இருந்தது.
வீரம் வீசும் எங்கள் மண்ணில் …
அந்தக்கொடூரத் தாக்குதலில் மாணவர்கள், பொதுமக்கள் வயது வேறுபாடுன்றி பலர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லக்கூட வாகனவசதி கூட இல்லாத நிலையில் எத்தனையோ பேர் உயிரிழக்கவேண்டிய பரிதாபம் ஏற்பட்டது. ஓலத்தின் குரல்கள் அந்த விதிகளில், தெருக்களில் ஏன் அந்த கிராமத்தையே நிறைத்தது.
|| நாகர் கோவில் படுகொலை நினைவில்…


 http://www.youtube.com/my_videos?o=U

சில மாணவர்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி இருந்தாலும், இரத்தப்போக்கு காரணமாக ஆசிரியரின் மடியில் பிணமானர்கள். சில ஆசிரியர்கள் மனநலம் பாதிப்படைந்தனர்.
ஒரு சில மணிநேரங்களில் அயற்கிராமங்களில் இருந்த வாகனங்களை கொண்டு வந்து காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையில் இடைவழியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்தன.
கருவறை பற்றி எரிய பிள்ளை மடிந்த சோகம், அப்படியாக அன்று அந்த கிராமத்தில் நடந்த இனக்கருவழிப்பு இன்றும் தன இயல்பை முழுவதுமாக இழந்த நிலையில் அந்த மண் மயான பூமியாக காட்சியளிப்பதை எம்மவர்களால் மறக்கத்தான் முடியுமா…?
நாகர் கோவில் மண்ணில் 22.09.1995 அன்று எம்மைவிட்டு பிரிந்து சென்ற மாணவர்களின் நினைவை சுமந்து வண்ணம் பயணிக்கின்றோம். எமது இனத்தைக் கருவறுக்க, சிங்கள இனவாதிகள் மாணவர்களைக் குறிவைத்தனர். கள்ளம் கபடம் ஏதுமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட மாணவச் செல்வங்கள் அணிந்திருந்த வெள்ளை சீருடைகளில் எல்லாம் இரத்தக் கறைகள்!
தமது குண்டு வீச்சில் 21 தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டோம் என்ற இறுமாப்பு சிங்கள வான்படைக்கு, கொன்றது பச்சை குழந்தையானாலும் சரி, அல்லது பிறந்து 3 நாள் ஆன குழந்தையானாலும் சரி, கொல்லப்பட்டது தமிழன் தானே என்று அவனுக்கு திருப்தி.
|| உறவை இழந்த ஒரு சகோதரனின் உள்ளத்திலிருந்து ….
இள வயதில் மடிந்த உங்களை
இன்றும் நினைத்து அழுகின்றோம்
பதினேழு ஆண்டுகள் கடந்தாலும்
பாசத்துடன் நினைவு கூருகின்றோம்!.
பள்ளி சென்ற உங்களோடு பலரை
அள்ளி எடுத்தான் ஒருநொடிப்பொழுதில்
அந்நியனின் “புக்காரா” வடிவில் காலனவன் அன்று
முப்பொழுதும் நினைத்து வாடுகின்றோம் என்றும்!
எங்களை விட்டு பிரிந்து சென்ற
உங்களின் நீங்கா நினைவுகளோடு….
ஆயினும் தொடராய் எத்தனை எத்தனை இப்படியான துயிர் தமிழீழ மண்ணில் செஞ்சோலை முதல், சிங்களவனின் வரம்பு எல்லை மீறிய இனவழிப்பின் உச்சம் முள்ளிவாய்க்கால் வரை சென்றும் வாய் மூடி கிடக்கிறது உலகம்.
தமிழீழத்திலே சிங்கள இனவெறியால் பலியாகிய ஆயிரம் ஆயிரம் உயிர்களின் ஆன்மாக்களின் குமுறலையும் கண்ணீரையும் குருதியையும் பிசைந்து அழியாத சுவடுகள் ஆகிப்போன 21 பூக்களின் உடல்கள் செங்குருதியில் மிதந்த அந்த கோர சம்பவத்தின் நினைவில் தமிழீழ தேசம் …
இன அழிப்பில் படுகொலையான எம் உறவுகளுக்கு எம் சீரம் தாழ்ந்த கண்ணீர் பூக்களை அவர் பாதம் தன்னில் வைத்து செல்கின்றோம்.
பலிகாகிய உறவுகளை நெஞ்சிருத்தி எம் தேசத்தில் இருள் மேகம் விலகி சுதந்திர உதயத்தைக் காண மலரப்போகும் தமிழீழத்தை ஒளிரவைக்க ஒன்று படுவோம் தமிழினமே …

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.