குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு -செங்கலடியில் வீதி மறியல் போராட்டம்!

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி, செங்கலடி நகரில் வீதி மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் செங்கலடி நகரைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தந்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை, செங்கலடி நகரி வீதியூடாக செல்லும் போது வழி மறித்த தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர், பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரிக்கை முன்வைத்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.